அவன் பேசுவான்...
அவனுக்கு தலை மயிருகூட அசையாது....
அவன் பேசுவான்...அவனுக்கு தலை மயிருகூட அசையாது....
ஆனால், உனக்கு....
உன் கை நரம்புகள் துடித்து வெளிவரும்உன் பற்கள் கடித்து உன் உதடுகள் புண்ணாகும்
உன் இதயம் 100 மடங்கு வேகமாய்த் துடிக்கும்
உன் உடம்பி்ல் ரத்த வெள்ளம் பீறிட்டு மோதும்
உன் கண்கள் ரத்தச் சிகப்பாகும்
உன் மூளைநரம்பு முறுக்கேறி வெடிக்கத்துடிக்கும்
வீழ்த்த வேண்டியவனை விட்டுவிட்டு
மண்ணெண்ணெய் புட்டியோடு நீ நிற்பாய்
பழைய பிணங்கள் மதிப்பற்றவையானபின்
இருபது வயதில் புதிய பிணம் தேவை அவனுக்கு
பிரச்சனையை சொல்லும் அவன்
தீர்வை மட்டும் உனக்கு சொல்லமாட்டான்
சரியான பாதையை உனக்குக் காட்ட மறுத்த அவன்
ஒருபோதும் தன்னை மாய்த்துக்கொள்ள மாட்டான்
உன் குடும்ப ஓலங்கள் அவன் காதில் விழாது
அலறல்களை அவன் அசட்டையோடு கடந்துபோவான்
முத்துக்குமார், செங்கொடி எரிந்தபோதும்
இதையேதான் சொன்னான்...!
இப்போதும் சொல்வான்...
இனியொரு தற்கொலை கூடாதென்பான்...
ஊடகங்களில் ஓலமிடுவான்...
நம்பிவிடாதே....!
இதையேதான் சொன்னான்...!
இப்போதும் சொல்வான்...
இனியொரு தற்கொலை கூடாதென்பான்...
ஊடகங்களில் ஓலமிடுவான்...
நம்பிவிடாதே....!
புரட்சியாளன் எதிரியைத் தவிர்த்து
எவருக்கும் தீயிடமாட்டான்...!
எவருக்கும் தீயிடமாட்டான்...!
பதிவு: Sara Vanan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக