வியாழன், 3 நவம்பர், 2016

நம்பு... இல்லையென்றால் நீ தேச விரோதி!

- போபால் சிறை நாட்டிலேயே அதிநவீன பாதுகாப்பு கொண்டது.
- சிறைச்சாலையில் பல்லாயிரக் கணக்கான காவலர்கள் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பு
- ஆயிரக்கணக்கான சி.சி.டி.வி. கேமரா பொருத்தி (வாய்க்குள்ள கரண்டு கம்பிய விட்டு லாக்கப் டெத் நடக்கிறப்ப மட்டும் வேலை செய்யாது) இருக்கும் சிறைச்சாலை.
- 35 அடி சுற்றுப்புற சுவர்
- தொலைநோக்கு கேமராவுடன் கண்காணிப்பு டவர்கள்
இப்ப மேட்டருக்கு வருவோம்...
-8 சிமி விசாரணை கைதிகள்
- ஒவ்வொருத்தனையும் தனித்தனியாதான் விசாரிப்பார்கள்.
- இவனை எப்போ விசாரிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியாது...அவனை எப்போது விசாரிப்பார்கள் என்று இவனுக்குத் தெரியாது...
- ஒருத்தனுக்கு ஒருத்தன் பாத்துக்கக்கூட முடியாது
- ஒவ்வொருத்தனுக்கும் தனித்தனி பூட்டிய அறை
- எட்டுப்பேரும் ஒரே நேரத்துல சத்தமே கேட்காம தனித்தனி பூட்டிய அறைகளை ஒடைச்சி வெளியில வந்து... 
- சுத்தியிருக்குற சி.சி.டிவி கேமரா கண்ணுல படாம...
- பல்லாயிரக்கணக்கான போலீஸ் ரவுண்ட்சுல இருக்கும்போது ஒருத்தர மட்டும் புடிச்சி கொலை பண்ணி
- போத்திக்கிற பெட்ஷீட்டை மயிரா திரிச்சி... சாரி... கயிரா திரிச்சி
- ஒரு போலீஸ் கண்ணுல கூட படாம அத வைச்சி சினிமாவுல காட்டுறமாதிரி 35 அடி செவுத்துல தூக்கிப்போட்டு (அப்படி தூக்கிப்போட்டா அங்க அது எப்படி மாட்டிக்கிதுன்னுதான் நமக்கும் தெரியல)
- இவ்ளோ ரிஸ்க் எடுத்து...
- ஜெயில தாண்டி வெளியில வந்தவனுங்க...
- ஏதும் வாகனம் ஏற்பாடு செஞ்சி எஸ்கேப் ஆகாம...
- ஆளுக்கொரு பக்கமா தெறிச்சி ஓடாம ரொம்ப கூலா ஒரே குரூப்பா ஒன்னா ஒரு கிராமத்துல போயி விருந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது....
- அந்த கிராம மக்கள் அவங்கள காட்டிக் குடுத்தாங்களாம்....
- அப்புறம் அந்த எட்டுப்பேரும் காடுமாதிரி இருக்குற இடத்துல ஆளுக்கு ஒருபக்கமா ஓட முயற்சி பண்ணாம
- ஒரு பாறை மேல ஏறி நின்னு போலீஸ்காரங்களுக்கு டாட்டா காட்டுவாங்களாம்....
- தப்பிச்ச சில மணி நேரங்கள்ல அதிநவீன துப்பாக்கி போன்ற ஆயுதங்களால தாக்கினாங்களாம்...
#அப்புறமா இந்த போலீஸ்காரங்க போயி அவங்கள திருப்பித் தாக்குனதுல அத்தன பேரும் செத்துட்டாங்களாம்....
#ஆளுக்கொரு பக்கமா செத்துக் கெடக்கறவனுங்கக்கிட்ட ஒரு தீபாவளி துப்பாக்கிக்கூட இல்லங்குறதுதான் மேட்டரே...!
#சென்னை சென்ட்ரல் ரெயில் குண்டு வெடிப்பு பைல் குளோஸ்.
- செத்தவன்ல ரெண்டு பேரு சென்னை சென்ட்ரல் ரெயில் குண்டு வெடிப்புல சம்பந்தப் பட்டவனுங்களாம்.... முடிஞ்சுதா மேட்டர்...
#இதை நாம் நம்பனும்... இல்லையென்றால் நாம் தேசவிரோதி...!
பாஜக-ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம்
-----
நாடு முழுதும் உள்ள சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளாக இருக்கின்ற 68 சத முஸ்லீம் இளைஞர்கள் எந்தவிதமான குற்றச்செயல்களோ அப்படி குற்றச் செயல்கள் செய்ததற்கான ஆதரமோ இல்லை.
ஆனால், அவ்வளவு பேுரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து சிறையில் அடைத்து அவர்களின் வாழ்வை சூறையாடிக்கொண்டிருக்கிறது மத்திய மாநில அரசுகள்.
முதலில் முஸ்லீம் இளைஞர்களை பிடித்து வைத்துக்கொண்டு, பிறகு குற்ற நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறது காவல்துறை.
எனவே, இப்படி தண்டனைக் கைதிகளாக, விசாரணைக்கைதிகளாக இருப்பவர்களை தேர்தல் நேரத்தில் மேற்கண்ட நாடகம் போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி என்கவுன்ட்டர் செய்து நாட்டை காப்பாற்றியது போல தேர்தல் ஆதாயம் அடையும்.
பாஜக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வக்கற்று திணறுகின்ற நேரத்தில் உரி, சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற டக்கரடித்து
பசிக்கு சோறு ஊட்டச்சொல்லி மக்கள் போராடுகின்ற வேளையில்....
அவர்களுக்கு தேசபக்தியை ஊட்டுகின்ற வேலையை செய்கிறது.
ஆகமொத்தம் முஸ்லீம்களை தேர்தல் அரசியலுக்கும், தேசப்பற்று அரசியலுக்கும் குஜராத்தில் நடத்தியது போன்று இன்னொரு முறை பயன்படுத்தினால் அது பாஜக - ஆர்.எஸ்.எஸ்சுக்கு பேராபத்தாக முடியும். விழும் அடியிலிருந்து மீளமுடியாத நிலைக்கு போய்விடும் ஆபத்து இருப்பதால்...
தற்போது, குஜராத் ஷொராபுதின், பிரஜாபதி, இர்ஷத் ஜஹான் போன்ற என்கவுன்டர்களைப் போலவும், இந்த என்கவுன்டரைப் போலவும் இனியும் நடக்கும்.
ஏனென்றால் இவர்கள் நேர்மைக்கு மாறானவர்கள். நெஞ்சுக்கு நேராய் நிற்கப் பயப்படுகிறவர்கள்.
இவர்களுக்கு உண்மை, சத்தியம் என்றால் என்னவென்று தெரியாது.
இந்திய மக்களைக் காப்பாற்ற இவர்களிடம் எந்தச் செயலும் இல்லை. ஆனால், மக்களை ஏமாற்ற இவர்களிடம் இருப்பது ஒரே ஒரு சொல்தான் அந்தச் சொல்லின் பெயர் 'தேசப்பக்தி்'
ஏழையின் பசியை இந்த தேசபக்தி போக்காது....
எப்போது எது தேவையோ அதை ஊட்ட வேண்டும்.
தேவையற்ற நேரத்தில் தேவையற்றதை ஊட்டினால் அது உடம்புக்கும் மனதுக்கும் ஒவ்வாததாக்கி, தேசபக்தியாவது மண்ணாங்கட்டியாவது போங்கடா மயிருன்னு சொல்லிவிட்டு போய்க்கிட்டே இருப்பான் நம்மாளு...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக